Thursday, October 22, 2009


தரிசனம்
உனது மஞ்சத்தில் இடம் பிடித்து
நெஞ்சத்தில் குடி இருந்தேன்
எனது எண்ணத்தை சொல்லி..
தரிசனம் பெற்றுக்கொண்டேன்.

10.11.09.

வேதப்புத்தகம்.
-------
மந்திரங்கள் ஓதவில்லை
உனக்கு.
மாமிசம் தரவில்லை
உனக்கு.
இருந்தும் நீ காட்டும் அன்பின்
வேதப்புத்தகத்தை படித்து..
மகிழ்ந்து போனேன்.

10.11.09.
-
இருளில் தோன்றும்
வின்மீனாய்.
உன் பார்வை என் மீதுவிழுந்து
கொண்டதால்..
எதிர்பாராத தாக்குதலில்
சிக்கித் தவிக்கின்றேன்
.

.----
10.11.09.

தொலை பேசி.
--------------
இதமான மாலைப்பொழுதில்
குளிர்தென்றல் மனதை தொட்டுச்செல்லும்
சுகமான பொழுதுகளில் எல்லாம்
கிடக்காத சந்தோசம்
என் தொலை பேசி அழைப்பில்
கிடைக்கின்றது.
-----
10.11.09.

இனைவோம்.
-----
நான் என்றால் தனி உலகம்
நீ..என்றால் வெற்றிடம்
நாம் என்றால் இன்பம்
அதனால்..
இருவரும் இனைந்தால் என்றும்
இலமையுலகத்தில் வாழலாம்.

10.11.09

வசந்தம்.
--------
எனக்குள் புதைந்து கிடந்த
சிரிப்பை..
உன் இதயத்தில் சில்லறை
கொட்டியது போல்
கொட்டியதால்..
என் வாழ்வில் வசந்தம்
ஆரம்பமானது.

10.11.09
காதல் ஒன்றே..
---------

ஒருவர் மீது ஒருவர்அக்கறை
காட்டுவதும்.
ஒருவர் மீது ஒருவர் உரிமை
எடுத்துக்கொள்வதும்.
ஒருவருக்கு ஒருவர் அடிமையாகிப்போவதும்.
இரு உயிரும்ஒன்றாகிப்போவதும்
கதல் ஒன்றே.
--------
மலர்கள்

----------
மழைத்துளிகள் எல்லாம்
மலர்களை முத்தமிடும் போதுதான்
காதலும் அழகாக பூக்கின்றது
-----
ஒருபக்கம்
---
ஒருபக்கம
தடைக்கள் தொடரட்டும்
மறுபக்கம்
காதல் வளரட்டும்.
----
பெயர்
------
உனக்கும் எனக்கும்
அழகான பெயர்
சூட்டப்பட்டதால் தான்
காதலும் அழகாக உள்ளது.

........
ஞாபகம்

எனது வாழ்க்கை சக்கரத்தின்.
உன் கொழுசு
உன் மோசமான நினைவுகளை
ஞாபக்படுத்தி சாகடிக்கின்றது.
-----
தவறிவிட்டேன்
-----
இந்தஜென்மத்தில்
தவறிவிட்டேன்
உன்னை அடைவதற்கு
அடுத்த ஜென்மமும்
நான் தவறிவிடவேண்டும்
உன்னிடம் இருந்து.
.......................
இதயப்புத்தகம்.
----------
ஆயிரம் கவிதைகளை கடன்வாங்கி
சேகரித்த இதயப்புத்தகத்தில்
இருந்து திருப்பி கொடுக்கும்
கவிதைகள் தான் இந்த காதல் கவிதைகள்.
.........
விழி
-----
விழி சொல்லும் காதலை விட
இதயம் சொல்லும் காதல்
அதிக சக்தி கொண்டது.
.........
வாழ்வது
.......
வாழ்வது இப்படித்தான் என்று
தினம் தினம் செதுக்கி
எடுக்கின்றாய் நீ..
என்னை

Friday, August 14, 2009






காதல் விழா
----------

தேனும் பாலும் உண்டு மகிழ
தேவன் உன் தரிசனம் வேண்டும்
காதல் விழா கொண்டாடி
கவியங்கள் பலபடைப்போம்
உல்லாசமாய் வானம் சென்று
தனிமையில் இன்பம் காண்போம்.
-------

தூரம்
------
பலமயில்களுக்கு அப்பால்
நீ.. இருந்தாலும்
நமது காதலை அழியாத
சுவடுகாளாக்கிக்கொண்டோம்.
--------
தாலி
------
காதல் என்பது கழுத்தில் தொங்கும்
வேலியல்ல
மனதில் தொங்கும் தாலி
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு
இருவர் ஒருவாராகி
ஒன்றாய் கலந்து
இன்பத்தில் தவன்று
இதயத்தில் எழுதப்படும் காதலே
உயர்வானது.

-----
என் இளவரசன்
----------------
இந்த இளவரசியின் இதயம்
என்ற மாளிகையில்
இளவரசனாய் குடிபுகுந்தாய்
கெஞ்சிக்கேட்டேன் அஞ்சகின்றாய்
கொஞ்சிக்கேட்டேன் மிஞ்சிவிட்டாய்
--------
என் அமுதே

அமுதே உன்னோடு இனைந்திருக்க
இனிய பொழுதாய் நீ
வருவாயா..?
வானவில்லை போர்வையாக்கி
வெப்பத்தை அனைத்திடலாம்.
--------
உன்வரவு
------

நமது வாழ்வில் கிடைக்காத
இன்பத்தை பெற்றுத்தந்தது
நமது காதல் காதல்
இதுவரை இனிப்பான தேனும் கசப்பானது
உன் வரவுக்கு பின்புதான்
கசப்பானவாழ்வு இனிப்பானது.
------
இருவர் ராசியும்
---------
சுபதினத்தில் சுகமாக வந்தாய்
கண்கள் இரண்டில் கனிவோட கலந்தாய்.
காலம் முழுதும் இனிப்பாக பேசினாய்
நம் காதலையும் காவியமாக்கினாய்
இதனால் இருவர் ராசியும் ஒன்றானாதால்
அழியாத புகழ்பொற்றோம் இவ்வுலகில்
---------

---------------
என் கவிதை நீ
---------------

வானம் சோகம்கொண்டதால்
பூமாதேவி மடியில் விழுந்து கண்ணீர்சிந்துகின்றது
மழையாக
நான் உன்மீது கொண்ட காதலால்
பார்க்துடிக்கும் என்விழிகள்
கவிதை மழை பொழிகின்றது
காற்றலையில்
உலகமே கேட்டு ரசிக்கின்றது
நீ கேட்க முடியவில்லை
காரணம்
உனது உல்லத்தில் கன்னியாக
நான் இருக்கின்றேன்
உனது இல்லத்தில்கணணி
இல்லை

உன் வீட்டு சற்லைற்
சன் ரீவி மட்டும்தான் தரும்
ரி ஆர் ரி தரமறுக்கின்றது..காரணம்
நீ.. தூரம் இருப்பதால்


-------
இரு பெயர் ஒன்றா
கியது!
------------

அழகு என்ற சொல்லால்
காதல் உருவாகியது
இளமை என்ற சொல்லால்
இன்பம் உருவாகியது
ஆனால்..
எனது மூண்றெழுத்து கொண்ட
பெயரோடு
உனது நான்எழுத்துகொண்ட பெயர் இணைந்து
ஏழுஸ்வரங்காளாகி
இசை என்ற இன்ப வாழ்கை தொடங்கியது
----------

இன்ப வீணை
நீ.

இன்பம் என்ற நான்கு எழுத்தால்
துன்பம் என்ற நான்கெழுத்தை என்
வாழ்வில் இருந்து வெளியேற்றியவன் நீ....
இசை என்ற இரண்டெழுத்தால்
காதல் என்ற முன்று முடிச்சு
இன்ப வீணையாக என்னை உலகிற்கு
அறிமுகமாக்கியவன் நீ..
என் மீது கொண்ட அன்பின் வேதத்தால்
நான் செய்யும் குறும்பகளை
நீ..எறும்பாக இருந்து வழி நடத்துகின்றாய் சீராக.

கொத்தி எடுக்கின்றாய்

------------------------------

தென்றாலாய் வந்து மயிலிறகால்
மனம் தடிவி களவாடிச்சென்றாய்
வதக்கி எடுக்கின்றாய்
வெந்து வெதும்பகின்றேன்
செதுக்கி எடுக்கின்றாய்
சிற்பமாய் ஆகிவிட்டுகின்றேன்
உனது வாடிக்கை வரவில் வேடிக்கை
காட்டி தூரத்து வின்மீனாய்
என்கண்ளை மட்டும் கொத்தி எடுக்கின்றாய்

Thursday, July 30, 2009


என்னுள் வாழ்பவனே.

----------------
நீ தந்த கொழுசில்

உன் அன்பைக்...காண்கின்றேன்.

நீ தந்த மெட்யில்

உன் உயிரை கண்கின்றேன்

எனக்கா துடிக்கம்

உன் இதயத்தை காண்கின்றேன்

முகம் காணத என்மேல்

வைத்திருக்கும்..

உனது உயர்வான

குணத்தை கண்கின்றேன்

இங்கிருந்தபடி.

ஆசைகள்
------

மாலைப்பொழுதில் மறையும்
சூரியனை பார்த்து சந்தோசம் கொள்வேன்
நீ இருக்கும் சூரியன் என் இல்லாம் நோக்கி
இசை வடிவல் வருவாய் என்று.
ஆனால் இப்போ
இரண்டும் இல்லை

அது என்ன என் ஆசைகளை
உன்னிடம் மறைப்பதால்
நான் மெல்லினம் என்கின்றாய்
என் ஆசைகளை மறைத்ததால்
உன் ஆசைகளை நிறைவேற்றிப்பார்த்தேன்.

இருந்தும் என் ஆசைகளை கூறுகின்றேன்
உன்னை சந்திக்கும் நாளில்
.
----------------------
நான்தேடும் உன் பாதம்.
----------------

நான் என்னை நேசிப்பதைவிட
உன்னை நேசிச்பது அதிகமாகிப்போய்விட்டது
என்பெயரை மறந்தேன்
அதிகாலை
சுப்பரபாதத்தில்
உன் பெயரை எழுதியதால்.

பெயர் மட்டுமா..? அழகு
உனது குரல் அழகு
உனது மொழி அழகு
தமிழை உச்சரிக்கும் விதம் அழகு
என்பதால்
உன் இசை தேவைதாயிகினேன்

--------

ஓம் காதலே சரணம்!
-------------
ஓம்சரணம்!!!!!!

உன்னைதொழுகின்றேன்!
விழிகளுக்கு நீ
கொடுத்த..
க.. விதைகளை
இசையாக்கி..

பார்த்தேன்
யாரும் போடத
மெட்டுகளும்

குரலும்
அமைந்ததால்

இன்பங்களை
சொல்லெடுத்து

கூறமுடியாத
படிஉறங்ககின்றேன்

உனது காதல்
மடியில்.
------
என் சாபமோ
------------
தேடித்தேடி முடங்கி விட்டேன்

தொலைவது என்பது உன்
வரலாற்றில் ஒன்றாகிப்போனது
என்னை பொறுத்தவரை
என் சாபமோ..என்றுதான்
நினைத்தால் கூட
உன்னை கானாது
தவிக்கின்றதுஇதயம்
-------------

முழுநிலா
------
வானத்தில் இருக்கும்
நிலவைநான்
ரசிப்பதை விட
என் இதயத்தில்

வாழும் உன்னை...
முழுநிலவாக
பார்கின்றேன்.

------

காதல்
---------
எங்கோ இருக்கும் உன்னிடம்
நட்பை கொடுத்தோன்
முகம் கானத்துடிக்கும்
என்விழிகளுக்கு..விருந்தாக
உனது செல்பேசி மட்டுமே.

இருந்தும்..

என்காக வாழத்துடிக்கும்
உன்னைகாதல் செய்ய மனது
துண்டுகின்றது

இன்னமும் இடம்
கொடுக்க வில்லை
எனது காலத்தின் பார்வை.
காரணம்.
எனக்குள் ஒரு காதல்
தூங்கிக்கொண்டு இருப்பதால்.

Monday, July 27, 2009

துரோகம்
------
பெற்றவள் துடிக்கின்றாள்

கற்றவன் அழுகின்றான்
சுமந்தவன் வெம்புகின்றான்
காதல் செய்தவன் இறக்கின்றான்
தாரத்தின் மடியில்

மகன் மயங்குகின்றான்
பணத்தின் பின் காதலை
மறக்கின்றான்
தூக்கிவிட்டகரங்களை
அடியோடு பிடுங்குகின்றான்
----


பேரனின் வருகைக்காக!
-----------------
தாத்தாவின் குரல் ஓசை
ஒவ்வொரு பழ மரங்களில்
உற்காந்து விம்பி விம்மிஅழுகின்றது
பேரனின் வருகைக்காக
பேரனின் பிஞ்சுக்கரம் பிடித்து
நட்டுவைத்த மரங்கள் எல்லாம்
பழுத்துக்குழுங்கின்றது
முதல் பழம் என் பேரனுக்கு
என்று கூவிக் கூவிநட்ட மரம்
கூட வாடிப்போய் காத்திருக்கின்றன

பிஞ்சுமீன் சோதியோடு
வாலைக்காய் பெரியல் சேர்த்து
ஒரு படி சோறு ஊட்ட
இரண்டு மணி நேரம்முற்றத்தில்
தள்ளாடியா தாத்தாவின்கால்கள்
காத்துக்கிடக்கின்றது
புலம் பெயர்ந்து சென்ற
பேரனின் வருகைக்காக

Sunday, July 26, 2009

நினைவுகள்
--------
ஆலமரத்தின் சலசல ஓசையை
வடி கட்டி எடுத்தது இசையின் நரம்பு
தனிமையின் ஏக்கமும்
மடிந்து கிடக்கும் நெற்கதிர்களும்
முற்றத்து மாமரங்களில்
சிதறி விழுந்த மாம்பழங்களும்
அமைதியாய் கிளைகளில்
தூங்கும் பறவைகளும்
கொக்குவில் ஜயனார் கோவிலும்
சுற்றிவந்த மஞ்சவனப்பதி முருகன் வீதிகளும்
கால் நடையில் சென்று வணங்கிய..
நல்லுர் கந்தனும்
சுதுமலை அம்மன்கோவிலும்
தெல்லிப்பலை துர்கா தேவியும்
மானிப்பாய் மருதடி விநாயகரும்
இனுவில் கந்தசாமி ஆலயமும்
உடுவில் கற்பா விநாயகர்
ஆலயங்களில் பார்த்து மகிழ்ந
பூங்காவனமும்
இதயத்தில் அமர்ந்து
கண்ணீர் சிந்துகின்றது.

அன்னார்ந்து பார்க்கும்
தென்னமரங்களில்அணிலின்
அட்டகாசடமும்
மரங்கொத்தியின் தாளங்களும்
மல்லிகைப்பந்தலின் வாசணையும்
முத்தமிடும் றோஜா தோட்டமும்.
எத்தனை அழகு நம் நாட்டில்
என்ன இல்லை நம் நாட்டில்
என்ன உண்டு இந்த நாட்டில்
இத்தனை வசந்தங்களை..
நினைக்கும் போது
கண்களில் கண்ணீர் திரை கட்டுகின்றது:



இறைவன்
---------
கருணையில் உள்ளத்திலும்
குழந்தையின் உதட்டிலும்
கொடுக்கும் கரங்களிலும்
தாயின் கருவறையிலும்
இரக்கமுள்ள இதயங்களிலும்
தடுமாறும்நிலையில்...
கைகொடுக்கும்கரங்களிலிலும்
இறைவனை கானலாம்.
---------

வீழ்ச்சி
--------
கோபத்தால் அறியாமை தோன்றும்

அறியாமையாயல் நிலை தடுமாறும்
நிலை தடுமாறினர் விவேகம் குறையும்
விவேகம் குறைந்தால்

தன்னிலையில் இருந்து
வீழ்ந்து போகின்றான்.

உழைப்பின் உயர்வு.
---------------
உண்மையின் உழைப்பில்
இன்பம் பெறலாம்
தூங்கபவன் பின்நோக்கி..
செல்லகின்றான்
செய்யம் தொழில் பக்தி
இருந்தால்உயர்வு என்பதில்
உறுதி காண்பான்

.தோல்வியின் பாதையில்
விதைகள் முளைத்திடும்
தோற்றவர் மீண்டும்
வெண்றிட முடியும்
துயரங்கள் கரைந்திட
துணிச்சல் பெருகும்
நாட்கள் கடந்தாலும்
நம்பிக்கை பிறக்கும்
உயர்வான உழைப்பில்
நிச்சயம் வெல்வீர்.
--------------

பெறாமை
--------
தன்னிலை மறக்கடித்து
தாபத்தில் தள்ளிவிடும்
மனதில் தீ எழுந்து...
எரியூட்டி வாடவைக்கும்
கண்முன்னே காண..
இன்பங்கள் பல இருந்தும்
பிறர் நலம் கண்டு
பொறுக்காதுபொங்கி எழும்
எண்ணாத எண்ணம் எல்லாம்
உள்ளத்தை தொட்டுவிட
புண்ணான மனதினில்
ஈட்டியை ஏவவிடும்
பொறுப்புக்களை மறக்கடித்து
பொல்லாப்பு கேட்கவைக்கும்
பொறுமையுடையவனை
தன்வசம் ஆக்கிவிடும்
மாற்றான் பொருள்
மீதுபொறாமை என்னும்...
தீ மூட்டி பேரழிவை.
சேர்த்து விடும்.

kavithaikuyil
rahini

------
நிஜம்
------
சென்ன வார்த்தை தவறாமல்

நிலை நாட்டுபவனும்
வாழ்க்கை எனும் சொல்லுக்கு
வாழ்ந்து காட்டியவனும்.
நீதி வழி நடந்து நேர்மையின்..
இலக்கணமாய்...
நெறியான வாழ்வுதனை
நேர்படவேவாழ்ந்தென்றும்
வையகத்துள் வாழும் முறைதனை
பிறர்குணர்த்தி
உய்விக்கும் மனிதனே
நிஜமான மனிதன்.

-------

மாற்றப்பட வேண்டும்.
-----------------
இன்பங்கள் இற்றுப் போயின

நியாயங்கள் நெலிந்தன
நேர்மைகள் தொலைந்தன
சத்தியம் சரிந்தன
வாய்மை தவறின
மனச்சாட்சி மரித்தன
மாற்றப்பட வேண்டும்
மாறுதலுக்கல்ல
சத்தியத்தின் உணர்வகளுக்கு.

kavithaikuyil
rahini
-------
பார்வை
------
சிந்தித்து செயல் பட முடியாத
மானிடதடுதின்
மாறுபட்ட வேஷம் தான்..
தடுமாற வைக்கின்றது
நடை முறையில் உத்தமரும்
சொல் நடையில் சத்தியவானும்
செயல் முறையில் கர்ணணும்
வெளி வேஷம் போடும் மானிடர்களிடம்
நிஜ முகத்தை பார்வையிட முடியமா..?
என்றும்.

kavithaikuyil
rahini

Friday, July 24, 2009


கூட்டுப்புழு
------
அடைமழைக்குள் கூட்டுப்புழுவாய்
வாழ்கின்றது..
இந்த மானசீக்காதல்
பெய்யும் மழையில்
கால் நனைத்திட துடிக்கும்...
பாதம்கண்டு....நினைவுகள்..
கூடகண்ணீராய் கரைந்தோடுகின்றது
வெள்ளத்தோடு வெள்மாய்.
----
தந்தை தாய்
----------
சுவைத்த தமிழை கவிதைகளால்
அள்ளிக்கொடுத்தேன்.
வானத்தை விட அதிகமாய்
என்னை என் பொற்ரோர்
ஈன்றெடுக்காவிட்டால்
இன்று எனக்குள்
இன்பமழை பொழியுமா..?
இல்லை உங்கள் முன்..
இந்தக் கவிக்குயில்
கூவத்தான் முடியுமா..?
நன்றி சொல்லித்தீராதமகளாய்
விம்மி அழுகின்றேன்
விண்ணுலகம் சென்றதனால்.

----
நேரம் இல்லை.
------
உனக்கு கவிதை எழுத..
எனக்கு நேரம் இல்லை
உன்னுள் என்னை..
தொலைத்துக்கொண்டதால்.

சூரியன்
-----
நான் உன்னை அழைப்பதற்கு
நீ என்னும் பாஸ்போட் எடுக்கவில்லையே!
வசப்பட்ட காதல் மனது
எத்தனை காலம் சென்றாலும்
உன்னை வந்தடைவது நிச்சியம்

அதுவரை...

எனக்குநீ தரும் இசையில்
நான் குளிர்காய்வதும்
உனக்கு நான் தரும் இசையில்
நீ.. குளிர்காய்வதுமாய்
இருவரும் வாழ்வோம்

என்றால்...
தடை போட்டது காலம்!!!!
மீண்டும் வருமா..?
இந்த சூரிய வொளிச்சம்.
உனது குரலை கேட்டிட.
-----
காலம்.
------
இந்தப் பிரபஞ்சத்தில்

எத்தனை பூஞ் சோலைகள்
அமைக்கப் பட்டிருக்கின்றன
அதில் ஒன்றை கூட
நான் ரசித்து செல்லமாய்..
துள்ளி விளையாட
இன்னம் காலம்
இடம் கொடுக்கவில்லை.
---
உனது இசை
-------
இரவுப்பொழுதில் நீ..சிந்திய

இசைகளை
ஒவ்வொருநாளும் நான்

அருந்திக்கொண்டு இருக்கின்றேன்.
உனது இசைகளை
கேட்கமுடியாத போது





Wednesday, July 22, 2009

இருள்
--
பகலை நினைத்து சந்தோசம்
கொண்டதும் இல்லை
இரவை நினைத்து
நிம்மதி கொண்டதும் இல்லை
நான் உருவாகியது
இருள் அறைக்குள்
அதனால்..
இரவை தேடி செல்வதும்
இல்லை
பகலை தேடி வந்ததும் இல்லை
இரண்டும் ஒன்றதான்.
---
மது
--
அருவியில் அள்ளிக்குடி என்றேன்!
ஆற்றில் அள்ளி குடி என்றேன்!
கிணற்றில் அள்ளி குடிஎன்றேன்!
உப்பாக இருந்தாலும் கடலில் அள்ளி குடி என்றேன்!
நீயோ...
பாட்டிலில் இருப்பது பழரசம் எனநினைத்து
நீ.. மதுரச´´த்தை அருந்தியது
என் தவறா..?இல்லை உன்தவறா..?

------
விழிகள்
------
சந்திகாத நட்பின்ஆழத்தின் பார்வை யில்
சந்தித்தும் கிடைக்காத அன்பின் துயரத்தில்
சிந்தித்தும் தோற்றவிட்ட காதல் வலிகளில்
கண்ணீர் மையால் எனது விழிகள்
கதை எழுதி போடுகின்றது .

தடுமாற்றம்.
----
பகல் இரவாகி தடுமாறுகின்றது சில ஞாபகங்கள்!

வீழ்ந்து மடிகின்றது உனது நினைவுக் கதிர்கள்!
மெதுவாக யன்னலை திறந்து பார்தால்!
சூரிய வொளிச்சம் கண்ணை பிழிந்தெடுக்கின்றது!
உனது நினைவுகள் அதகமானதால்..
பகலா..இரவா..என்ற நிலையை..
தடுமாற வைப்பதுதான் காதல்

----
உள்ளத்தை ஆழும் கொடிய நோய்

பார்க்கும் இடமெல்லாம்...
சொர்க்கத்தின் ப்ரம்மையின் நிலை...
தமிழுக்க தேடும் புதிய வரிகளின்...வர்ணணைகளில்
ஆட்கொள்ளும் வசனங்கள்..
கொண்டதுதான் இந்த காதல் நிலை.


முத்து.
---
நீ.. இதுவரை சிந்திய
இசை முத்துக்களை..
நான் கொஞ்சம் கொஞ்சமாக....
அருந்திக்கொண்டு இருக்கின்றேன்.
---
கவிதை
---
கவிதை என்னை அறிய முன்
கவிதையாகவந்தேன் உன்னிடத்தில்
நீ வாசித்து விடுவதற்குள்
நழுவிச்செல்கின்றதுகால்கள்.

தாமரை
---
உன்னை சந்திகாத பொழுதுகள் எல்லாம்
நான் வாடிய தாமரை
--
காதல்
----
நொடிப்பொழுதில்.காற்றலையில்
உன் குரல் கேட்டு
ஏற்பட்ட காதலுக்கு கவிதை எழுதி எழுதி!!
வீட்டு மேசையில் பேப்பர்
உயர்ந்து கொண்டேபேகின்றது.
ஆனால்!!
நம் காதல் மட்டும்
என்னும் உயரவே இல்லை.
----
றணங்கள்
----
இதயம் வலிக்கின்ற
தரணங்களில் எல்லாம்
உன்னிடம் செல்வதில்லை
உனது இதயமாவது
றணங்கள் இல்லாது
இருக்கட்டும் என்று
,
---
முத்தம்
--
இருவரும் பரிமாறிக்கொள்ளும்
முத்தங்களை பெற்று
இன்பம் காண்கின்றது..
தொலை பேசி.

---
இசை
---
பூங்காவணத்துக்குள்
ஒருபூங்காவனமா..?

என்ற கேள்விக்குள்
வஞ்சிக்கப்பட்ட வாழ்வின்

உன்னை கெஞ்சிக் கேட்கின்றேன்
வார்த்தைகளால் அல்ல

இசையால்.

Friday, June 26, 2009

வானொலி


வானொலி
-------

உன் இதயம் என்ற வான் ஒலியில்
நான் என்றும் காதல் அலைவரிசையாக
இதில் உனது பெயரும் எனது பெயரும் மட்டுமே
ஒலி பரப்பாக வேண்டும்.
--------
சுமங்கலி.

------
விதவையாய் இருக்கம் தாழ்கள்
எல்லாம் கவிஞர்களின் பேனா சிந்தும்
மைகளால் சுமங்கலியாக வாழ்கின்றது.
----
கரைந்தோடும் கவிதைகள்.

--------

பாசத்தின் வெளிப்பாடுகளும்.
அன்பின் வேதங்களும்
நேசத்தின் உருவங்களையும்
வரைந்தெடுத்த கவிதைகள்
யாவும்!!!
கரைந்தோடுகின்றன... நியாயமற்ற கரங்களில்

சிக்கியதால்.
-----
பெண்

----
இலக்கியத்திலும் ஒவ்வொரு..
கவிஞனின் பேனாக்களிலும்
அதிகமாக காணப்படும்
இனம்பெண்ணினம்
ஒன்றே.

--
நீ..
--
மழை வந்தால் வயலுக்கு பெருமை
நீ..வந்தால்
என் கவிதைக்குபெருமை.