Monday, July 27, 2009

துரோகம்
------
பெற்றவள் துடிக்கின்றாள்

கற்றவன் அழுகின்றான்
சுமந்தவன் வெம்புகின்றான்
காதல் செய்தவன் இறக்கின்றான்
தாரத்தின் மடியில்

மகன் மயங்குகின்றான்
பணத்தின் பின் காதலை
மறக்கின்றான்
தூக்கிவிட்டகரங்களை
அடியோடு பிடுங்குகின்றான்
----


பேரனின் வருகைக்காக!
-----------------
தாத்தாவின் குரல் ஓசை
ஒவ்வொரு பழ மரங்களில்
உற்காந்து விம்பி விம்மிஅழுகின்றது
பேரனின் வருகைக்காக
பேரனின் பிஞ்சுக்கரம் பிடித்து
நட்டுவைத்த மரங்கள் எல்லாம்
பழுத்துக்குழுங்கின்றது
முதல் பழம் என் பேரனுக்கு
என்று கூவிக் கூவிநட்ட மரம்
கூட வாடிப்போய் காத்திருக்கின்றன

பிஞ்சுமீன் சோதியோடு
வாலைக்காய் பெரியல் சேர்த்து
ஒரு படி சோறு ஊட்ட
இரண்டு மணி நேரம்முற்றத்தில்
தள்ளாடியா தாத்தாவின்கால்கள்
காத்துக்கிடக்கின்றது
புலம் பெயர்ந்து சென்ற
பேரனின் வருகைக்காக

No comments:

Post a Comment