Thursday, October 22, 2009


தரிசனம்
உனது மஞ்சத்தில் இடம் பிடித்து
நெஞ்சத்தில் குடி இருந்தேன்
எனது எண்ணத்தை சொல்லி..
தரிசனம் பெற்றுக்கொண்டேன்.

10.11.09.

வேதப்புத்தகம்.
-------
மந்திரங்கள் ஓதவில்லை
உனக்கு.
மாமிசம் தரவில்லை
உனக்கு.
இருந்தும் நீ காட்டும் அன்பின்
வேதப்புத்தகத்தை படித்து..
மகிழ்ந்து போனேன்.

10.11.09.
-
இருளில் தோன்றும்
வின்மீனாய்.
உன் பார்வை என் மீதுவிழுந்து
கொண்டதால்..
எதிர்பாராத தாக்குதலில்
சிக்கித் தவிக்கின்றேன்
.

.----
10.11.09.

தொலை பேசி.
--------------
இதமான மாலைப்பொழுதில்
குளிர்தென்றல் மனதை தொட்டுச்செல்லும்
சுகமான பொழுதுகளில் எல்லாம்
கிடக்காத சந்தோசம்
என் தொலை பேசி அழைப்பில்
கிடைக்கின்றது.
-----
10.11.09.

இனைவோம்.
-----
நான் என்றால் தனி உலகம்
நீ..என்றால் வெற்றிடம்
நாம் என்றால் இன்பம்
அதனால்..
இருவரும் இனைந்தால் என்றும்
இலமையுலகத்தில் வாழலாம்.

10.11.09

வசந்தம்.
--------
எனக்குள் புதைந்து கிடந்த
சிரிப்பை..
உன் இதயத்தில் சில்லறை
கொட்டியது போல்
கொட்டியதால்..
என் வாழ்வில் வசந்தம்
ஆரம்பமானது.

10.11.09
காதல் ஒன்றே..
---------

ஒருவர் மீது ஒருவர்அக்கறை
காட்டுவதும்.
ஒருவர் மீது ஒருவர் உரிமை
எடுத்துக்கொள்வதும்.
ஒருவருக்கு ஒருவர் அடிமையாகிப்போவதும்.
இரு உயிரும்ஒன்றாகிப்போவதும்
கதல் ஒன்றே.
--------
மலர்கள்

----------
மழைத்துளிகள் எல்லாம்
மலர்களை முத்தமிடும் போதுதான்
காதலும் அழகாக பூக்கின்றது
-----
ஒருபக்கம்
---
ஒருபக்கம
தடைக்கள் தொடரட்டும்
மறுபக்கம்
காதல் வளரட்டும்.
----
பெயர்
------
உனக்கும் எனக்கும்
அழகான பெயர்
சூட்டப்பட்டதால் தான்
காதலும் அழகாக உள்ளது.

........
ஞாபகம்

எனது வாழ்க்கை சக்கரத்தின்.
உன் கொழுசு
உன் மோசமான நினைவுகளை
ஞாபக்படுத்தி சாகடிக்கின்றது.
-----
தவறிவிட்டேன்
-----
இந்தஜென்மத்தில்
தவறிவிட்டேன்
உன்னை அடைவதற்கு
அடுத்த ஜென்மமும்
நான் தவறிவிடவேண்டும்
உன்னிடம் இருந்து.
.......................
இதயப்புத்தகம்.
----------
ஆயிரம் கவிதைகளை கடன்வாங்கி
சேகரித்த இதயப்புத்தகத்தில்
இருந்து திருப்பி கொடுக்கும்
கவிதைகள் தான் இந்த காதல் கவிதைகள்.
.........
விழி
-----
விழி சொல்லும் காதலை விட
இதயம் சொல்லும் காதல்
அதிக சக்தி கொண்டது.
.........
வாழ்வது
.......
வாழ்வது இப்படித்தான் என்று
தினம் தினம் செதுக்கி
எடுக்கின்றாய் நீ..
என்னை